பணம் கேட்டு மிரட்டியவருக்கு சிறை
கோவை; நாமக்கல், பரமத்தி வேலுாரை சேர்ந்தவர் ஜவஹர், 25. பெங்களூரு ஒயிட்பீல்ட்ஸ் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவருடன், பெங்களூருவில் தங்கி பணிபுரிந்து வரும் கோவையை சேர்ந்த இளம்பெண் நட்புடன் பழகி வந்தார். இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற போது, ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஜவஹருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்ததால், அவருடன் பழகுவதை தவிர்த்தார்.
ஆத்திரமடைந்த ஜவஹர், பெண்ணுடன் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை, பெண்ணின் தாயாருக்கு அனுப்பி, இளம்பெண் குறித்து தவறாக பேசினார். இளம்பெண் கேள்வி எழுப்பியதால், அவரை திட்டி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். புகாரின் பேரில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் வழக்குப்பதிந்து ஜவஹரை, சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடிநீர் இணைப்பு கொடுத்து குவித்த சொத்துக்கள் ஏராளம்; ரெய்டுக்கு போன லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிர்ச்சி!
-
மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாக்., யாத்ரீகர்கள் 68 பேர்!
-
சந்திரயான்-4 விண்கலம் 2027ல் விண்ணில் பாயும்!
-
மோசடி வழக்கு; நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக பிடிவாரன்ட்
-
மர்மம் விலகியது; கேரளாவில் 3 புலிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான்!
-
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
Advertisement
Advertisement