ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் இ.எம்.ஐ.,யில் பொருட்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில், சுபமுகூர்த்த பட்டுப் புடவைகள் மற்றும் திருமணத்திற்கு தேவையான பர்னிச்சர்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பர்னிச்சர், எலக்ட்ரிக்கல் பொருட்களுக்கு இ.எம்.ஐ., வசதி உள்ளது.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் எண்ணற்ற ஜவுளி ரகங்கள், விதவிதமான டிசைன்களில் குவிந்துள்ளன.

தற்போது சுபமுகூர்த்த தினங்களையொட்டி, திருமண விழாவை, திருவிழாவாக கொண்டாடும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

சுபமுகூர்த்த பட்டுப்புடவைகள் எண்ணற்ற வகையில் அணிவகுத்துள்ளன. பட்டுப் புடவைகள், 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

சீர்வரிசைக்கு தேவையான கட்டில், மெத்தை, சோபா, டைனிங் டேபிள் உள்ளிட்ட பர்னிச்சர்கள், பாத்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.

வாடிக்கையாளர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு தள்ளுபடி விலையில் பர்னிச்சர் பொருட்கள் விற்பனை செய்வதுடன், இ.எம்.ஐ., வசதியும் உள்ளது.

மேலும், 7,500 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்கும் ஒவ்வொருவருக்கும் பரிசு வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முதல் ஏ.கே.டி. டெக்ஸ்டைல்ஸ் வரை வாடிக்கையாளர்கள் வந்து செல்ல இலவச வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

Advertisement