செங்கை அரசு பள்ளி மாணவர்கள் மாநில டேக்வாண்டோவில் அசத்தல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850209.jpg?width=1000&height=625)
திருப்போரூர், பிப். 9-
மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2025 போட்டி, சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 மாணவ - மாணவியர் மூன்று பிரிவுகளில் பங்கேற்றனர்.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு பயர் டேக்வாண்டோ கிளப் சார்பில் குன்னப்பட்டு, மானாமதி, செம்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதிகளைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ - மாணவியர் 20 பேர் பங்கேற்றனர்.
இவர்களில், 10 பேர் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றனர். 5 பேர் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர். 2 பேர் மூன்றாமிடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றனர்.
மேற்கண்ட மாணவ - மாணவியர் அனைவரும், வரும் ஜூன் மாதம் மகாராஷ்டிரா மாநிலம், லக்னோவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு
-
விமான நிலையம் அமைக்க பரந்துார் தேர்வானது எப்படி? மத்திய அரசு விளக்கம்
-
இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ராகுல் மீது வழக்கு
-
எம்.பி.,க்களை இழுக்க முயற்சி உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
-
'இண்டியா' கூட்டணி தலைவர்கள் 'ஈகோ'வை கைவிட வேண்டும்: திருமா
-
வீட்டு காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மெஹபூபா?
Advertisement
Advertisement