கூண்டில் சிக்கிய குரங்குகள்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3851272.jpg?width=1000&height=625)
குன்னுார் : குன்னுார் காட்டேரி பூங்காவில், கடந்த பல நாட்களாக குரங்குகள், மலர் செடிகளை சேதம் செய்து வந்ததுடன், சுற்றுலா பயணிகளுக்கும் தொல்லை தந்து வந்தன.
இது தொடர்பான புகாரின் பேரில், வனத்துறையினர் கூண்டு வைத்து, இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர். அதில், 63 குரங்குகள் கூண்டிற்குள் சிக்கின.
வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர், குரங்குகளை கொண்டு சென்று பவானி அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில் மேலும் பல குரங்குகள் பூக்கள்; செடிகளை சேதம் செய்து வருவதால், அவற்றையும் விரைவில் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்
Advertisement
Advertisement