'மருதமலைக்கு வரும் பக்தர்கள் பாலிதீன் பை பயன்படுத்தாதீங்க'
கோவை : தைப்பூசத்திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை தைப்பூசத்திருவிழா, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சூழ வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள்பங்கேற்பர்.
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருவதால், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தயங்க மாட்டார்கள்.
அதனால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
இதனால் பக்தர்களுக்கும் பொதுநல அமைப்புகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். என்று ஆணிவேர் அமைப்பு நிறுவனர் சாந்தகுமார் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்