சாலையில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம் சுகாதார சீர்கேடு

ஊட்டி : ஊட்டி சேரிங்கிராஸ் சாலையில் அடிக்கடி கழிவு நீர் தேங்கியுள்ளதால், துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சேரிங்கிராஸ் சாலையில், அரசு கலைக் கல்லுாரி செல்லும் பகுதியில், பாதாள சாக்கடை சேதமடைந்து கழிவுநீர் சாலையில் வெளியேறி வருகிறது. அருகில் பயணியர் நிழற்குடை அமைந்துள்ளதால், கல்லுாரி மாணவர்கள் உட்பட, குன்னுார் வழியாக செல்லும் நுாற்றுக்கணக்கான பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

தவிர, ஆர்.டி.ஓ., அலுவலகம், தனியார் மருத்துவமனை உட்பட பல்வேறு தேவைகளுக்காக இச்சாலையில் சென்று வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், கடந்த சில நாட்களாக, பாதாள சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர், சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement