சாலையில் மணல் குவியல்; வாகன ஓட்டிகள் தவிப்பு
கரூர்: கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், கரூர்-திருச்சி, கரூர்-சேலம், கரூர்-மதுரை போன்ற சாலையில் பஸ்கள், கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதில், எம்.சாண்ட் மணல் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து சிதறி விழும் மணல், சாலையில் தேங்கி உள்ளது. இதனால் சாலையில் செல்லும் டூவீலர் வாகன ஓட்டிகள், சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில், மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளில் இருந்து சிதறி விழும் மணல் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர், மணலில் சறுக்கிவிழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில் சாலையோரம் தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
நாளை பத்திரப்பதிவு நடக்குமா; நடக்கணும் என்கிறது பதிவுத்துறை!
-
தங்க சப்பரத்தில் வீதி உலா வந்த முருகப்பெருமான்
-
சுகாதாரத்துறையில் கால் பதிக்கும் அதானி: இரு நகரங்களில் மருத்துவக்கல்லுாரி தொடங்க திட்டம்!
-
தொழில்நுட்பத்தால் விளைந்த தீமை; டிஜிட்டல் திருமணத்தால் பெற்றோர் அதிர்ச்சி!
-
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்; குகி அமைப்பு வலியுறுத்தல்
-
புலி தாக்கியதில் வன ஊழியர் படுகாயம்