பெருமாள் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

கரூர்: தை மாத ஏகாதசியையொட்டி, கரூர் மாவட்டம், நொய்யல் கோம்புபாளையம் சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், நேற்று காலை மூலவருக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பின், ஸ்ரீதேவி பூதேவி உடனான, மூலவர் சீனிவாச பெருமாள் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement