மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கானலட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 9ல் துவங்கியது. அன்று மாலை, 5:00 மணிக்கு கோ பூஜை, கங்க பூஜை, கணபதி பூஜை மற்றும் நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் ஹேம்நாத், லாவண்யா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement