ஸ்ரீவி.,யில் வயலுக்குள் இறங்கிய பஸ்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852808.jpg?width=1000&height=625)
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மதுரைக்கு சென்ற தனியார் பஸ் அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக பஸ்ஸில் இருந்த 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்
ராஜபாளையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக மதுரைக்கு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
அதிகாலை 5:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆயுதப்படை மைதானம் அருகே பஸ் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் வலது பக்கம் 3 அடி பள்ளத்தில் இருந்த வயலுக்குள் இறங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் காயமின்றி தப்பினர்.
பின்னர் வேறு பஸ்சில் பயணிகள் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கள்ளக்குறிச்சியில் துயரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
-
ஹூண்டாய் 'எக்ஸ்டர்' காரில் உயர்ந்த விலை மாடல்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
Advertisement
Advertisement