ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
'ஹோண்டா' நிறுவனத்தின் அனைத்து கார்களும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்குவதாக, இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்திடம் 'இ20' சான்றிதழை பெற்றுள்ளது. மத்திய அரசின் வாகன கொள்கையின் படி, ஏப்ரல் 2025 முதல் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்க வேண்டும். இதன் அடிப்படையில் இந்த சான்றிதழ் பெற்றுள்ளது, ஹோண்டா நிறுவனம்.
ஆனால், 2009 முதலே அனைத்து ஹோண்டா கார்களும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. அதனால், 2009க்கு பிறகு ஹோண்டா கார்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு, எத்தனால் கலப்பு எரிபொருள் தொடர்பான எந்த பாதிப்பும் வராது. எத்தனால் கலப்பு அல்லாத இன்ஜின்களில், 'இ20 பெட்ரோல்' பயன்படுத்தினால், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் அரிப்பு, உலோகம் துருப்பிடிப்பு உள்ளிட்டவை ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும்
-
காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்
-
அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம்; தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம்: ஐகோர்ட் தீர்ப்பு
-
முயல் ரத்தம் கலந்த ஹேர் ஆயில் பறிமுதல்: 3 கடைகளுக்கு சீல்!
-
அமெரிக்க ஆசிரியரை விடுதலை செய்தது ரஷ்யா; டிரம்புக்கு இன்னொரு வெற்றி
-
அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பூசாரி காலமானார்
-
உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை இன்று சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்தது!