பட்டுக்கூடு அங்காடியில் ரூ.1.49 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், கடந்த வாரத்தில், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில், நேற்று முன்தினம், 17 பேரும் நேற்று, 4 பேர் மட்டுமே ஏலத்துக்கு வந்திருந்தனர்.

இவர்கள், 6 குவியல்களாக, 208 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 728 முதல், 742 ரூபாய் வரை சராசரியாக, 735 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 1.49 லட்சம் ரூபாய். நேற்று நடந்த ஏலத்தில் அரசுக்கு, 2,240 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

Advertisement