பசுபதீஸ்வரர் கோவிலில் ஜோதி ஐக்கிய தினவிழா

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கருவூரார் ஜோதி ஐக்கிய தின விழா நேற்று நடந்தது. அதில், தைப்பூச திருவிழாவையொட்டி, முதுபெரும் ஞானி சித்தர் ஸ்ரீமத் கருவூரார் சன்னதியில் இருந்து, கோவில் வளாகத்தில் ஜோதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

சிறப்பு பூஜைக்கு பிறகு, கல்யாண பசுபதீஸ்வரர் மூலவரிடம் ஜோதி ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement