திருவள்ளூர்: புகார் பெட்டி; நுாலக கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்

நுாலக கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகள்



ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ளது அரசு நுாலகம். தினமும், 100க்கும் மேற்பட்டவர்கள் நாளிதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றை படித்து வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த நுாலக கட்டடத்தின் சுவரில் செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், நுாலக கட்டடத்தின் உறுதிதன்மை பாதிக்கும் நிலையில் உள்ளது. எனவே, செடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.ராமச்சந்திரன்,

ஊத்துக்கோட்டை.

Advertisement