அறிவியல் துளிகள்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853713.jpg?width=1000&height=625)
01. சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள், காஸ்மிக் கதிர்களில்இருந்து பாதுகாத்துக் கொள்ள ஹைட்ரோ ஜெல்லைப் பயன்படுத்த முடியும் என்று, பெல்ஜியம் பல்கலை கண்டுபிடித்துள்ளது.
02. உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன என்பதை அறிவோம். சமீபத்தில் கிரீன்லாந்து நாட்டில் உள்ள ஒரு பனி ஏரி உருகியதால் 3 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் வெளியேறி உள்ளது. இது விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
03. ஒரிகாமி (origami) என்பது காகிதத்தில் விதவிதமான வடிவங்களை உருவாக்கும் ஜப்பானிய கலை. இதை அடிப்படையாகக் கொண்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலை கட்டடக்கலை மாணவர், ஒருவர் தரை தளத்தை வடிவமைத்துள்ளார். இதை உருவாக்க வழக்கமான அளவை விட குறைவான கான்கிரீட்டும், இரும்புமே பயன்பட்டுள்ளன.
04. தக்காளி முதலிய தாவரங்களில் இருக்கும் சேர்மம் லைக்கோபீன் (Lycopene). இது மனித மூளையின் செயல்பாட்டைக் கூர்மையாக்கும் தன்மை உடையது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
05. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகே வந்து செல்லும் விண்கல் பென்னு. இங்கிருந்து நாசாவால் கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகளைச் சோதித்த விஞ்ஞானிகள், இதில் உயிர் உற்பத்திக்குத் தேவையான பாஸ்பேட், க்ளோரைட் உள்ளிட்ட உப்புகள், அமினோ அமிலங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும்
-
ஆர்.சி.பி., அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் தேர்வு; வாழ்த்து சொன்ன கோலி
-
இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழக உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம்
-
பாலியல் புகார்களை விசாரிக்க தவறினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் மகேஷ்
-
தேர்தல் வாக்குறுதிகள்; வெள்ளை அறிக்கை தாருங்கள்; தி.மு.க.,வுக்கு ராமதாஸ் கேள்வி
-
பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் இளையராஜா
-
வக்பு மசோதா குறித்த கூட்டுக்குழு அறிக்கை பார்லியில் தாக்கல்; அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு