வறண்ட வானிலை பனிமூட்டம்

கோவை; வேளாண் பல்கலை, கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை மாவட்டத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை, காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும்.

அதிகரிக்கும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, எள் சாகுபடி செய்யும் விவசாயிகள், டி.எம்.வி., 4, 6, எஸ்.வி.பி.ஆர்.,1 பிப்., இரண்டாவது வாரத்தில் சாகுபடி செய்யலாம். விதை நேர்த்தி செய்வது நல்லது.

மரவள்ளியில் வெள்ளை ஈ தாக்குதல் இருக்கலாம் என்பதால், விவசாயிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். மஞ்சள் நிற ஒட்டுப்பொறியை விவசாயிகள் பயன்படுத்தலாம்.

தென்னையைப் பொறுத்தவரை, வெப்ப நிலை உயர்வதால், கருந்தலைப் புழு தாக்குதல் அதிகரிக்கலாம். எனவே, பிரகோனிட் ஒட்டுண்ணிகளை பயன்படுத்தலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement