135 கிலோ பட்டுக்கூடுரூ.96 ஆயிரத்துக்கு ஏலம்


135 கிலோ பட்டுக்கூடுரூ.96 ஆயிரத்துக்கு ஏலம்


ராசிபுரம்:ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 135 கிலோ பட்டுக்கூடு, 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 135 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ, 750 ரூபாய், குறைந்தபட்சமாக, 600 ரூபாய், சராசரியாக, 707 ரூபாய்க்கு விற்பனையானது. 135 கிலோ பட்டுக்கூடு, 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement