மாநில நிர்வாகக்குழு கூட்டம்
கடலுார்: கடலுாரில் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ் தலைமை தாங் கினார். மாநில பொதுசெயலாளர் வழக்கறிஞர் சத்தியசீலன் வரவேற்றார்.
புதுவை மாநில தலைவர் கலியமூர்த்தி, மாவட்டசெயலாளர்கள் கடலுார் ஆறுமுகம், விழுப்புரம் சிவபதி முன்னிலை வகித்தனர். விழுப்புரம் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மழைமேகுணிப்பாண்டியன், வேலுமூர்த்தி பங்கேற்றனர்.
கூட்டத்தில் வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை வேண்டும். பட்டியல் சமூக மக்களின் நலனுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு மடைமாற்றம் செய்து வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுயஉதவி குழுவினருக்கு பயிற்சி
-
திருவெற்றியூர் கண்மாய் கலுங்கை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு
-
பூட்டிக் கிடக்கும் பாலுாட்டும் அறை
-
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதி
-
தொழிற் கூட்டுறவு சங்க இணை உறுப்பினர் சேர்க்கைக்கு அழைப்பு
-
சிவகாசிக்கு போதிய டவுன் பஸ்கள் இல்லை ஸ்ரீவி.,யில் தவிக்கும் கல்லுாரி மாணவர்கள்
Advertisement
Advertisement