ரூ.1,000 லஞ்சம் வாங்கிய பெண் ஊழியருக்கு '3 ஆண்டு'
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆம்பலாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 71; விவசாயி. இவர், தன் மகள் திருமணத்திற்காக மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ், திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் பெற விண்ணப்பிக்க முடிவு செய்தார்.
அதற்காக, 2017 மே 30ம் தேதி, ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊர்நல அலுவலராக பணியாற்றி வந்த, அஞ்சலி தேவி, 65, என்பவரிடம் மனு அளித்தார்.
மனு குறித்து ஒரு மாதங்களான நிலையில், எந்த தகவலும் வராததால், 2017 ஜூன் 28ம் தேதி, அஞ்சலி தேவியிடம் விசாரித்தார். அப்போது, அஞ்சலிதேவி, ராமச்சந்திரனிடம் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
புகாரின்படி, அஞ்சலிதேவி லஞ்சம் வாங்கியபோது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நேற்று அஞ்சலி தேவிக்கு 3 ஆண்டு சிறை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும்
-
இலவச மனைபட்டா கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
-
லட்சுமி சோரடியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
-
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சி.சி.டி.வி., கேமராக்கள் இயக்கம்
-
விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
-
கொலை முயற்சி வழக்கில் கைதான இரண்டு பேருக்கு 'குண்டாஸ்'
-
அரசு கல்லுாரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை எஸ்.எப்.ஐ., போலீசில் புகார்