சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் 7வது நாளாக போராட்டம்

புதுச்சேரி சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் நலச் சங்கம் சார்பில் பணி வழங்க வலியுறுத்தி 7வது நாளாக குடும்பத்துடன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, சுகாதாரத்துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஏற்படும் காலி பணியிடங்களில் 5 சதவீதம் பணி வழங்கிட வேண்டும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக பணி வழங்கப்படவில்லை.
இந்நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் நலச்சங்கம் சார்பில் இயக்குநர் அலுவலகம் எதிரே அனைத்து வாரிசு தாரர்களுக்கும் ஒருமுறை தளர்வு அளித்து கருணை அடிப்படையில் வாரிசுதாரர் பணி நியமனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி கடந்த 11ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். தொடர்ந்து, 7வது நாளாக நேற்று சங்கத்தின் ஒருங்கிணைப்பார் டேவிட், இணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்
-
டெண்டர் பங்கீட்டில் அடிதடி டவுன் பஞ்., அலுவலகம் சூறை
-
துணை முதல்வர் நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகி டிரவுசர் கிழிப்பு
-
'கேஸ்' நடத்த காசில்லையாம்! செயின் பறித்தவர் சிக்கினார்
-
பாரில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த கவுன்சிலர், மகன்களுக்கு கும்மாங்குத்து
-
சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை
-
கொலையாளிக்கு அடைக்கலம் கணவன், மனைவிக்கு 'கம்பி'