சிறுமி படத்தை சித்தரித்த தி.மு.க., நிர்வாகி மகன் கைது
பெருந்துறை:சிறுமி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஆபாசமாக வெளியிட்ட தி.மு.க., நிர்வாகி மகன், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த ஈங்கூர், செங்குளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்; தி.மு.க., கிளை அவைத்தலைவர். இவரது மகன் சுரேந்தர், 24; கோவை தனியார் மில்லில் குவாலிட்டி இன்ஜினியராக உள்ளார். பெருந்துறையை சேர்ந்த, 15 வயது சிறுமியின் போட்டோவை மார்பிங் செய்து, சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர், பெருந்துறை போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து சுரேந்தரை கைது செய்து, கோபியில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
-
முதல்வர் பிறந்த நாள் கொட்டிவாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
-
தேசிய பாரா தடகள போட்டியில் ஏராளமான குளறுபடிகள் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் கூட தரப்படவில்லை
-
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
சீர்மரபினர் நலவாரிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
-
மின்மாற்றியில் சிக்கிய கால்பந்து சிறுவன் பலி; ஒருவர் படுகாயம்
Advertisement
Advertisement