வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண பிப்., மாதத்துக்கான வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் வரும் 28ம் தேதி காலை, 9:30 மணிக்கு நடக்கிறது.

அதைத் தொடர்ந்து, காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் பவன்குமார் தலைமை வகிக்கிறார். கோவை மாவட்ட விவசாயிகள், குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

Advertisement