மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்க மருதம் கிராமத்தினர் வலியுறுத்தல்

மருதம்:வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் கிராமத்தில். கடந்த 2004ம் ஆண்டு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டடப்பட்டது. கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாக தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
தண்ணீர் வசதி இல்லாததால், கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், சுகாதார வளாகத்திற்கு பூட்டு போடப்பட்டு பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, மின்மோட்டாரை சீரமைத்து, மகளிர் சுகாதார வளாக கட்டடத்தை முழுமையாக புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மருதம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டில்லி முதல்வர் ரேகா குப்தா
-
கும்பமேளாவில் கவர்னர் ரவி, அண்ணாமலை புனித நீராடினர்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்
Advertisement
Advertisement