மகன், மகளை கொன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி


மகன், மகளை கொன்ற தந்தை மருத்துவமனையில் அனுமதி


கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோக்குமார், 45. இவர் கடந்த, 19ல், மனைவி, இரு மகள்கள், ஒரு மகனை, அரிவாளால் வெட்டினார். இதில் மூத்த மகள் விஜயதாரணி, 13, மகன் அருள்பிரகாஷ், 6, உயிரிழந்தனர். மனைவி தவமணி, 38, மற்றொரு மகள் அருள்பிரகாஷினி, 10, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெங்கவல்லி போலீசார், அசோக்குமார் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றனர். அவர், உடலில் காயம் இருந்ததால் சிறையில் அடைக்க அனுமதிக்கவில்லை.
பின், சேலம் அரசு மருத்துவமனையில் அசோக்குமாரை சேர்த்தனர். அங்கு, எஸ்.ஐ., தலைமையில், 5 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement