பைக் - லாரி மோதி கொத்தனார் பலி


பைக் - லாரி மோதி கொத்தனார் பலி

வாழப்பாடி:வாழப்பாடி, விலாரிபாளையத்தை சேர்ந்த கொத்தனார் பிரகாஷ், 32. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, அவரது, 9 வயது மகள், 7 வயது மகனுடன், 'ஸ்டார் சிட்டி' பைக்கில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
சோமம்பட்டி பெரியாண்டிச்சி கோவில் அருகே,
தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. பைக்கில் சென்ற, 3 பேரும் காயமடைந்தனர். மக்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரகாஷ் உயிரிழந்தார். அவரது மகன், மகளுக்கு முதலுதவி அளித்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வாழப்பாடி போலீசார் விசாரணையில், பிரகாஷ் ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்றது தெரிந்தது. தொடர்ந்து
விசாரிக்கின்றனர்.

Advertisement