தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒன்றிய செயற்குழு கூட்டம்

ப.வேலுார்: ப.வேலுார் ஆசிரியர் மன்ற அலுவலகத்தில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம் நடந்தது. பரமத்தி, கபிலர்-மலை ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர், கபிலர்மலை ஒன்-றிய தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் சேகர் அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில், மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்-களுக்கு வழங்க வேண்டும். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்-டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். பள்ளி ஆண்டுவிழா மற்றும் நுாற்றாண்டு விழா-விற்கு, செலவுத்தொகையை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.

Advertisement