பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம்: மாசி சனிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் விட்டல-புரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபி-ஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.

இதேபோல் ராமர் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திரு-வள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்-னதானம் வழங்கப்பட்டது.

Advertisement