'முருகன் வழியில் மும்மொழிக்கு ஆதரவு தெரிவியுங்கள்'
திண்டுக்கல்: ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் கூறியுள்ளதாவது :
முருகனுக்கு மாநாடு நடந்த பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ், ஆங்கிலம், மலையாள எழுத்துக்களில் அறிவிப்பு பலகை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு இருக்கிறது. மும்மொழி கல்விக்கொள்கையின்படி தமிழ், ஆங்கிலம், விருப்பமொழியாக ஏதேனும் ஒரு மொழியை அரசு பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ள சொல்கிறது. கட்டாயம் ஹிந்தியை கற்று கொள்ள வேண்டும் என்று அந்த கொள்கையில் எந்த இடத்திலும் சொல்லவில்லை.
தமிழக அரசு இரு மொழி கல்விக் கொள்கை என மாணவர்களின் கல்வி உரிமையில் தலையிடுகிறது. ஹிந்தி மொழியை தார் பூசி அழிக்கும் இவர்களுக்கு தமிழ் அல்லாத பிறமொழி எழுத்துக்களை அழிப்பதற்கு தைரியம் இருக்காது. மலையாள மொழி பேசுபவர் மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி என மும்மொழிகளை கற்று கொள்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கும் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி கற்றுக்கொண்டால் திராவிடத்தின் பெயரால் இவர்கள் செய்யும் அரசியல் மக்களுக்கு புரிந்து முகமூடி கிழிந்து விடும் என்பதால் இரு மொழி கொள்கை போதும், மும்மொழி கல்விக் கொள்கை வேண்டாம் என அடம்பிடிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
ரயில் நிலையங்களில் அத்துமீறல்; தி.மு.க.,வினர் மீது வழக்கு
-
அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை என்ன? நாளை கேட்கிறது அமைச்சர்கள் குழு
-
மணமக்கள் பெயரைப் பார்த்தால் சங்கடம்: திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
-
போலீஸ் வாகனங்கள் உடைப்பு; சென்னையில் ஒருவர் கைது
-
கந்தர்வகோட்டையில் குடிநீர் விநியோகிப்பாளர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை .
-
பெண்கள் சக்தி நாட்டை வலுப்படுத்தும்; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு