தோட்டக்கலை அலுவலர் குழாய் திருட்டில் சிக்கினார்

கூடலுார்: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்பனை செய்த தோட்டக்கலை துறை அலுவலர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் பாசன வசதிக்காக வழங்க, கூடலுார் தோட்டக்கலை அலுவலகத்தில் வைத்திருந்த, 1.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 150 பிளாஸ்டிக் குழாய்கள் கடந்த வாரம் மாயமாகின.
இது தொடர்பாக, துறை உதவி இயக்குநர் புகாரில் கூடலுார் போலீசார் விசாரித்தனர். இதில், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன், விடுமுறை நாளில் குழாய்களை திருடி, நெல்லியாளம் பகுதி கடைக்காரருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக, தயானந்தன், 32, கடை உரிமையாளர் சதானந்தன், 40, டிரைவர் முத்துக்குமார், 45, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து, குழாய்களை பறிமுதல் செய்தனர்.
தயானந்தன், ஏற்கனவே சத்தியமங்கலம் அருகே நகை திருட்டு முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, சஸ்பென்ஷனில் இருந்துள்ளார். கடந்த ஆண்டு கூடலுார் தோட்டக்கலை துறை அலுவலராக பணியில் சேர்ந்து, மீண்டும் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.
மேலும்
-
தமிழகம் உட்பட 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட் வேட்டை தீவிரம்
-
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா: தி.மு.க.,
-
விஜய் கட்சி ஆண்டு விழா: கியூ.ஆர்., குறியீடுடன் அனுமதி
-
கும்பமேளாவில் பிரேமலதா குடும்பத்துடன் பங்கேற்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் வந்தது எப்படி?
-
பணி நியமன ஆணை தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்