கிராமத்தில் புகுந்த யானை தாக்கியதில் கன்று குட்டி பலி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஜவளகிரி வனச்சரக யானைகள், வனத்தை ஒட்டிய பகுதி தோட்டத்தில் புகுவது வாடிக்கை. நொகனுார் கிராமத்தில், ஒற்றை ஆண் யானை நேற்று காலை சுற்றித் திரிந்தது.
இதேபோல், தேன்கனிக்கோட்டை முள்பிளாட் வனத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை ஆண் யானை, உப்பராயனப்பள்ளி, நேரலட்டி வழியாக அகலக்கோட்டையை அடுத்த மல்லேஸ்வரா மலை பின்புறமுள்ள கூடன்ஏரி பகுதிக்கு, காலை 9:00 மணிக்கு வந்தது.
அங்கு விவசாய நிலத்தில் கட்டியிருந்த விவசாயி முத்தப்பா என்பவருக்கு சொந்தமான, எட்டு மாத பசு கன்றை தந்தத்தால் குத்திக் கொன்றது. தோட்டத்தில் மனைவியுடன் நின்றிருந்த முத்தப்பா, யானையை பார்த்து ஓட்டம் பிடித்தார்.
அதே தோட்டத்தில் பம்ப் செட் கொட்டகை கூரையை சேதப்படுத்திய யானை, ஜவளகிரி அருகே ஜல்லி மாரியம்மன் கோவிலை ஒட்டிய வனப்பகுதிக்குள் சென்றது. பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்த யானையால் மக்கள் பீதியடைந்தனர்.
மேலும்
-
எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா: தி.மு.க.,
-
விஜய் கட்சி ஆண்டு விழா: கியூ.ஆர்., குறியீடுடன் அனுமதி
-
கும்பமேளாவில் பிரேமலதா குடும்பத்துடன் பங்கேற்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் வந்தது எப்படி?
-
பணி நியமன ஆணை தாமதம் பன்னீர்செல்வம் கண்டனம்
-
3வது மொழி படிப்பதை அ.தி.மு.க., தடுக்காது