தண்ணீர் தொட்டியில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
வாழப்பாடி: வாழப்பாடி, செல்லியம்மன் நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி பழனிசாமி, 43. அதே பகுதியில் உள்ள சரவணன் தோட்டம் அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு, நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது பழனிசாமி, அதே பகு-தியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கியதாக, நண்பர்கள் கூச்ச-லிட்டனர்.
மக்கள் தகவல்படி, வாழப்பாடி தீயணைப்பு துறை-யினர், 3 நிமிடத்தில் விரைந்து வந்து, பழனிசாமி உடலை, தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்டனர். வாழப்பாடி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இறந்த பழனி-சாமிக்கு, மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?
Advertisement
Advertisement