25 கிலோ கஞ்சா சிக்கியது; இருவர் கைது
நாகப்பட்டினம் : நாகையில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம், கீழையூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு பிரதாபராமபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்ற இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், புதுச்சேரி மாநிலம், கூனிச்சம்பட்டு, ஐய்யனாரப்பன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரதீப், 30, நாகை மாவட்டம், செருதுார், செல்வம், 39, என்பதும், இருவரும் இரண்டு பைகளில் 25 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி, விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. கீழையூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்
-
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு: கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பாய்ந்தது வழக்கு
Advertisement
Advertisement