மரக்கன்று நடுதல்

மதுரை: மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் ஒத்தக்கடையில் மரக்கன்று நடுதல், நீர் ஊற்றி பராமரித்தல் தொடர்பான களப்பணி தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது.

பவுண்டேஷன் ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாஸ்கரன் வரவேற்றார். உறுப்பினர்கள் பாலமுருகன், கலைவாணன், அபிநயா, நளினா, பரமேஸ்வரன், ஸ்டெல்லா மேரி பங்கேற்றனர். மாணவி வினோதா நன்றி கூறினார்.

Advertisement