பழநி மாசி திருவிழாவில் இன்று கம்பம் சாட்டுதல்
பழநி,: பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவில் இன்று இரவு திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறுகிறது.
பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா கொண்டாடப்படுகிறது. பிப்.21 இரவு 8:00 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் மாசி திருவிழா துவங்கியது. இன்று அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வர மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டுதல் நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம் பக்தர்கள் பால் ,மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்வர்.
மார்ச் 4 ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல், மார்ச் 11 இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மார்ச் 12 ல் மாலை 4:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா,மார்ச் 13 இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
மேலும்
-
குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்; 16 வயது சிறுவன் கைது
-
பஸ் வசதி இன்றி மாணவர்கள் அவதி
-
செயற்கை தடகள டிராக்கில் ரப்பர் துகள்கள் ஒட்டும் பணி
-
கிராமமா... நகரமா... வாழ்விடம் தெரியாமல் வசிக்கும் மக்கள்: அனுப்பானடி தாய்நகர் குடியிருப்போர் அவலம்
-
சமயநல்லுாரில் ரயில்வே கேட் அவதி
-
வங்கக்கடலில் நிலநடுக்கம்! கோல்கட்டாவில் உணரப்பட்ட அதிர்வுகள்