பழநி மாசி திருவிழாவில் இன்று கம்பம் சாட்டுதல்

பழநி,: பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவில் இன்று இரவு திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறுகிறது.

பழநிமுருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா கொண்டாடப்படுகிறது. பிப்.21 இரவு 8:00 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் மாசி திருவிழா துவங்கியது. இன்று அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வர மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாட்டுதல் நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம் பக்தர்கள் பால் ,மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்வர்.

மார்ச் 4 ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல், மார்ச் 11 இரவு 7:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மார்ச் 12 ல் மாலை 4:30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா,மார்ச் 13 இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Advertisement