நாடார் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூட்டம்

பெருந்துறை: பெருந்துறை சட்டசபை தொகுதி நாடார் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சீனாபுரத்தில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் பொன் விஸ்வநாத நாடார் கலந்து கொண்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, நாடார் மாவட்ட செயலாளர் தம்பி, மாநில பொருளாளர் கவின்சங்கர், மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement