ரேஷன் கடைக்கு துாரம் அதிகம் தங்கள் பகுதியில் அமைக்க மனு

ஈரோடு: ஈரோடு டி.ஆர்.ஓ., விடம், மாநகராட்சி மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதி, மாதேஸ்வரன் நகர் மக்கள், மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில், மாதேஸ்வரன் நகர், சி.எம்.நகரில், 510 குடும்பங்கள் உள்ளோம். நாங்கள், ஆர்.என்.புதுார், மாதவகாடு பகுதி ரேஷன் கடையில் பொருட்-களை வாங்குகிறோம்.


வெகுதுாரம் சென்று பொருட்களை வாங்குவதில் சிரமம் உள்-ளது. பல நேரங்களில் சர்க்கரை, அரிசி, பச்சரிசி, பாமாயில் போன்-றவற்றில் சில பொருட்கள் இல்லை என்பதால், மீண்டும் ஒரு முறை செல்லும் நிலை ஏற்படுகிறது. நாங்கள் வசிக்கும் பகுதியி-லேயே, அரசு புறம்போக்கு இடம் அதிகம் உள்ளதால், அங்கேயே கடையை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்

Advertisement