டி.எஸ்.பி., தாயிடமே வீடு புகுந்து நகை பறிப்பு

மதுரை: கருமாத்துாரில் பெண் டி.எஸ்.பி., தந்தை வீட்டில் புகுந்த நபர், 5 சவரன் நகையை பறித்து தப்பினார்.

சிவகங்கை மாவட்ட டி.எஸ்.பி.,யாக இருப்பவர் பிருந்தா. இவரது தந்தை வீடு, மதுரை மாவட்டம், கருமாத்துார் பசும்பொன் நகரில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அறையில் பிருந்தா துாங்கிக் கொண்டிருந்தார்.

அவரது தாய், தந்தை ஹாலில் துாங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை, 2:30 மணிக்கு வீட்டு கேட்டை திறந்து உள்ளே வந்த நபர், பிருந்தாவின் தாயை மிரட்டி, அவர் அணிந்திருந்த, 5 சவரன் நகையை பறித்துச் சென்றார்.

அதேபோல், அருகில் வசிக்கும் ரேஷன் கடை ஊழியர் செந்தில் வீட்டிற்குள் புகுந்த நபர், 3 சவரன் நகை, மூன்று விளக்குகள், 20,000 ரூபாயை திருடிச் சென்றார். செக்கானுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement