புத்தக கண்காட்சி

சாத்துார்: சாத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் 3 நாள் தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா நடந்தது.

வக்கீல் சங்க தலைவர் மாரிமுத்து செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தனர்.துணைத் தலைவர் மணிவண்ணன் பொருளாளர் வாசுதேவ பிரபு துணைச் செயலாளர் பால்பாண்டி ஆகியோர் வாழ்த்தினர்.

சார்பு நீதிபதி முத்து மகாராஜன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். பிப்., 24 முதல் பிப்.26 வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது .புத்தகம் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாத்துார் பார் கவுன்சில் ,நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட்.,மதுரைஇணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement