சிவராத்திரியை முன்னிட்டு 'சோம்நாத் மஹோத்சவம்'

குஜராத்தின் சோம்நாத் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சோம்நாத் மஹோத்சவம் நிகழ்ச்சியை மாநில முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.


குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில், நுாற்றாண்டு பழமையான சோம்நாத் சிவன் கோவில் உள்ளது. 12 ஜோதிர்லிங்க தலங்களில் முதலாவதாக வழிபடப்படுகிறது. நாளை நடக்கவுள்ள சிவராத்திரியை முன்னிட்டு இங்கு மூன்று நாள் மஹோத்சவம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


நேற்று துவங்கி நாளை வரை நடக்கவுள்ள இந்த சோம்நாத் மஹோத்சவம் நிகழ்வை மாநில முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மாலை துவக்கி வைத்தார்.


''சோம்நாத் மஹோத்சவம் நடக்கும் இடம் வெறும் மதத்தை குறிக்கும் தளம் மட்டுமல்ல, மன உறுதி, கலாசாரம் மற்றும் இந்திய அடையாளத்தின் சின்னமாக அது விளங்குகிறது,'' என, முதல்வர் தெரிவித்தார்.


இந்த விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் பிரசித்தி பெற்ற இசை மற்றும் நடனக்கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


-நமது சிறப்பு நிருபர்-

Advertisement