மனைவி மாயம்: கணவர் புகார்

விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி அம்சா, 24; இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில தினங்களாக தம்பதிக்கிடையே கருத்து குடும்பத் தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி முதல் அம்சாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

ரமேஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement