ராவுத்தன்குப்பத்தில் ஜெ., பிறந்த நாள் விழா

வானுார்: ராவுத்தன்குப்பத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், ராவுத்தன்குப்பம் ஊராட்சியில், சதீஷ் என்பவர், 62 அடி உயர அ.தி.மு.க., கட்சிக் கொடி கம்பம் அமைத்துள்ளார். இந்த கொடியேற்று விழா, ஜெ., பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சதீஷ் வரவேற்றார். சக்கரபாணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் முன்னாள் அமைச்சர் சண்முகம், கட்சிக் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள், ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், பேரவை செயலாளர் வீரப்பன், திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன்.

மண்டல ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் எழில்ராஜ், கவுன்சிலர் பிரகாஷ், வீரப்பன், இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் வினோத்குமார், பிரகாஷ், குமார், தமிழ்ச்செம்மல், கார்த்திகேயன், நிர்வாகிகள் சேகர், சக்திவேல், மணி, சிவக்குமார், காந்தி, மகாதேவன், கிருஷ்ணராஜ், அன்பு, மணிபாரதி, விக்ரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement