பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பரவசம்  

திருப்பூர்; திருப்பூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷம் முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. முன்னதாக நந்திகேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வெள்ளி ரிஷப வாகனம் மீது தம்பதி சமதேராக உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், டி.பி.ஏ., காலனி - காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, அலகுமலை கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட திருப்பூர் பகுதி சிவாலயங்களில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. உற்சவர் தம்பதி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். இச்சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Advertisement