அங்காளம்மன் கோவிலில் நாளை மயான கொள்ளை

நெட்டப்பாக்கம்: செம்படப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நாளை நடக்கிறது.

நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் பிரசித்திப்பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாயானக்கொள்ளை விழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு 7:00 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது.

இன்று இரவு 7:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி, நாளை மதியம் 1:00 மணிக்கு மாயானக் கொள்ளை விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

Advertisement