விவசாயியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு
திருக்கனுார்: விவசாயியை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு வாய்க்கால் கரை வீதியை சேர்ந்தவர் முருகானந்தம், 49; விவசாயி. இவர், நேற்று மதியம் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று கொண்டிருந்தார். மணலிப்பட்டு முருகன் கோவில் அருகே கூனிச்சம்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த சுரேஷ், 30; அருள், 26; ஆகியோர் முருகானந்தத்தை வழிமறித்து, திட்டி, தாக்கினர்.
காயமடைந்த முருகானந்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர், அளித்த புகாரின் பேரில், சுரேஷ், அருள் ஆகியோர் மீது திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
-
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
நடிகர் விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்!
-
வருஷநாடு கோவில்பாறை அருகே கரடி தாக்கி இருவர் பலி
-
அதிகரிக்கும் பேனர் கலாசாரத்தால் ஆபத்து
-
ஆர்ப்பாட்டம்..
Advertisement
Advertisement