புகார் பெட்டி

கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை



மூலக்குளம் அன்னை தெேரசா நகர், 3வது மெயின் ரோடில், வாய்க்கால் அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு அதிகரித்துள்ளது.

வேலு, மூலக்குளம்.

ரயில்வே கேட்டில் வாகன நெரிசல்



முதலியார்பேட்டை ரயில்வே கேட் மூடி, திறக்கும் போது, வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ரம்யா, முதலியார்பேட்டை.

நிழற்குடையின்றி பயணிகள் அவதி



தவளக்குப்பத்தில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கதிரேசன், தவளக்குப்பம்.

சாலை ஆக்கிரமிப்பு



காந்தி வீதியில், சாலையோர ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மதி, காந்தி வீதி.

Advertisement