பணி வழங்க கோரி தொடர் போராட்டம்

புதுச்சேரி: சுகாதாரத்துறையில் வாரிசு தாரர்களுக்கு பணி வழங்க கோரி, தொடர்ந்து 12வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியின் போது, இறந்த வாரிசு தாரர்களுக்கு பணி வழங்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பணி வழங்க கோரி,சுகாதாரத்துறை ஊழி யர்கள் வாரிசு தாரர்கள் நலச்சங்கத்தின் சார்பில், தொடர்ந்து, சுகாதாரத்துறை அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சங்க ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், டேவிட் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் தொடர்ந்து, 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement