மகள் மாயம் தாய் புகார்

கிள்ளை: மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

சி.முட்லுார் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ஹேமமாலினி மகள் ஜெகதீஸ்வரி, 21; இவர், கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

ஹேமமாலினி அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement