வேப்பூரில் போலீசாருடன் வாக்குவாதம் அ.தி.மு.க., நிர்வாகி உட்பட 2 பேர் கைது
கடலுார்: வேப்பூரில் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., நிர்வாகி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பூர் மேம்பாலம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை ஆம்னி பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 35 பயணிகள் படுகாயமடைந்தனர். அப்போது, ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை, வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, பரமக்குடி அ.தி.மு.க., மத்திய இளைஞரணி ஒன்றிய செயலாளர் நாகராஜன், 32; காட்டு பரமக்குடி கோபாலமணிகண்டன், 30; ஆகியோர் தாங்கள் வந்த காரை நடுரோட்டில் நிறுத்தி, போலீசாரை திட்டி, போக்குவரத்திற்கு இடையூறு செய்தனர்.
இதையடுத்து, நாகராஜன், கோபாலமணிகண்டன் மீது வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை
Advertisement
Advertisement