மகா சிவராத்திரி வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதி சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பெரிய நாயகர், பஞ்சலிங்கம், அண்ணாமலையார் சன்னதிகளில் நான்கு கால பூஜைகளும் சிவனடியார்களின் கயிலாய வாத்தியங்கள் முழங்கிட நடந்தது.
கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர், ரயில்வே குடியிருப்பு சித்தி விநாயகர் கோவிலில் சொக்கநாதர் சுவாமி, தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர், மங்கலம்பேட்டை மரகதாம்பிகை உடனுறை ஆத்துார்புரீஸ்வரர், ராஜேந்திரபட்டிணம் நீலகண்டேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆயிரக்கணக்கானோர் சிவபுராணம், திருவாசகம் பாடியபடி விடிய விடிய கண் விழித்து வேண்டுதலை நிறைவற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் தேவை உள்ளது; சொல்கிறார் கவர்னர் ரவி
-
சாம்பியன்ஸ் டிராபியில் மோசமான தோல்வி; பாக்., வீரர்களுக்கு ரத்தாகும் சலுகைகள்?
-
இன்றும் தங்கம் விலை ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.63,680!
-
நடிகை பாலியல் புகாரில் மாலை 6 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்
-
கருவில் குழந்தை பாலினத்தை கண்டறிந்த விவகாரம்; அரசு டாக்டர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்
-
திருச்சியில் ரூ.1.22 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்; கடத்தியது 'குருவி'யா என விசாரணை
Advertisement
Advertisement