ஆற்று மணல் திருட்டு ஒருவர் மீது வழக்கு
திருக்கனுார் : ஆற்று மணல் கடத்தி வந்து, வீட்டில் கொட்டி வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரையோரம், மணல் திருடப்பட்டு வருவதாக, திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், நேற்று அப்பகுதியில் திடீர் சோதனை செய்தனர்.
செல்லிப்பட்டு முருகன் நகரில் உள்ள ஒரு வீட்டு மனையில், ஆற்று மணல், வாகனம் மூலம் கடத்தி வரப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் திருடி வந்ததாக, செல்லிப்பட்டை சேர்ந்த மூர்த்தி, 47; மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோர்ட் நடவடிக்கைகள் மொபைல்போனில் பதிவு; விதி மீறியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
-
'யார் பெரிய தாதா' என சிறைக்குள் மோதல் போட்டியில் ரவுடியை தீர்த்தது அம்பலம்
-
உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரரிடம் 3 நாள் விசாரணை
-
சீமானுக்கு அடுத்த நெருக்கடி; சம்மனுடன் சென்ற ஈரோடு போலீசார்
-
'இளைஞர்களின் சக்தியும், நம்பிக்கையும் தான் விக்சித் பாரத் 2047 இலக்குக்கு முக்கிய காரணி'
-
ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி
Advertisement
Advertisement